அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்சை பேச்சு!

 

அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்சை பேச்சு!

அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்: அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்களில் இவரும் ஒருவர். நேற்று கூட, ‘வீர பாண்டிய கட்டபொம்மனைப் போல் மீசையை முறுக்கினால், அரசியலில் கமல் தூக்கிலப்படுவார்’ என சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில், சாத்தூரில் இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும். 

அதிமுகவை யாராலும், எவனாலும் அழிக்க முடியாது; எங்களை யாரும் அதட்டி ஆள முடியாது” என பேசியுள்ளார்.

வழக்கமாக அரசியலில் ஈடுபடுபவர்கள், தங்களைத் தைரியமானவர்களாக காட்டிக் கொள்ள இது போன்ற வசனங்களை பேசுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்கள் இதுபோல் பேசுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.