அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம்
அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் முக்கிய கட்சிகள் அனைத்தும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆளும் கட்சியான அதிமுகவின் தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், இருக்கக்கூடிய வைகைச்செல்வனை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/hQbRhGz9Rl
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 8, 2018
இது தொடர்பாக வெளியாடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, அதிமுக பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினர் உள்ளிட்டோரை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காக டாக்டர்.வைகைச்செல்வன் நியமனம் செய்யப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.