அதிமுக கொடுத்தது திருநெல்வேலி அல்வாவா? டெல்லி அல்வாவா? – ஸ்டாலின் 

 

அதிமுக கொடுத்தது திருநெல்வேலி அல்வாவா? டெல்லி அல்வாவா? – ஸ்டாலின் 

தேனியில் வெற்றி பெற அதிமுக தந்தது திருநெல்வேலி அல்வாவா? அல்லது டெல்லி அல்வாவா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தேனியில் வெற்றி பெற அதிமுக தந்தது திருநெல்வேலி அல்வாவா? அல்லது டெல்லி அல்வாவா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வேலூர் வெள்ளக்குட்டையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டது பேசிய மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி அமையும் என்ற எனது கனவு நனவாகப் போகிறது. ஆட்சியை தக்க வைக்க போராடும் அதிமுக அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. வேலூரில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்சாலையை கதிர் ஆனந்த் கொண்டு வருவார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியூ டவுன் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்

தமிழகத்தில் தி.மு.க பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல. சட்டமன்றத்தில் அதிக நாள் இருந்த பெருமை கலைஞருக்கு அடுத்து துரைமுருகனுக்கு தான் உள்ளது. அவருடைய மகன் தான் கதிர் ஆனந்த். இவர் வெற்றி பெற்றால் வாணியம்பாடி பகுதி மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி செய்து தரப்படும்” என கூறினார்.