அதிமுக எம்.பி., ராஜேந்திரன் மரணம்; மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

அதிமுக எம்.பி., ராஜேந்திரன் மரணம்; மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் நேற்று விருந்து கொடுத்தார். அதில் கலந்துகொண்ட விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், அங்கிருந்து அவரது சொந்த ஊரான வானூருக்கு நள்ளிரவில் சென்றார்.

பின்னர், இன்று காலை 4 மணியளவில் அங்கிருந்து அவரது வீடு உள்ள விழுப்புரத்துக்கு காரில் சென்றார். அவ்வறது கார் திண்டிவனம் அருகே கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதுதவிர, ராஜேந்திரன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.