அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… மு.க.ஸ்டாலினுக்கு செக் வைத்த எடப்பாடி..!

 

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… மு.க.ஸ்டாலினுக்கு செக் வைத்த எடப்பாடி..!

சந்தேகத்துக்குரிய எம்.எல்.ஏக்களை முன்பே தனது வீட்டிற்கு அழைத்து தலைக்கு தலா ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து சத்தியம் வாங்கி இருக்கிறார் எடப்பாடி.

ஜூலை 1ம் தேதி சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடக்க இருக்கிறது. edappad

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திங்கள் கிழமை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கிளப்ப இருக்கிறது திமுக. 

அதற்காக அதிமுக எம்எல்ஏக்களை கடும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். நம்பிக்கைக்கு உரிய எம்எல்ஏக்களை மட்டும் சுதந்திரமாக நடமாட விட்டு இருக்கிறார்கள். சந்தேகம் உள்ள எம்எல்ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில்தான் இருக்கிறார்கள். அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள். நேரடி பேச்சுவார்த்தையா? அல்லது செல்போன் மூலம் வேறு யாருடனாவது பேசுகிறார்களா என்று உளவுத்துறை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்து வருகிறது. stalin

சந்தேகத்துக்குரிய எம்.எல்.ஏக்களை முன்பே தனது வீட்டிற்கு அழைத்து தலைக்கு தலா ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து  சத்தியம் வாங்கி இருக்கிறார் எடப்பாடி. அதனால் இப்போதைக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில்தான் இருக்க வேண்டும். தலைமை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கடும் நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்கள். OPS

திமுக தொடர்புள்ள எம்எல்ஏ, அவர்களின் பிஏ, நெருக்கமான அடிப்பொடிகளின் எண்களும் தொடர் கண்காணிப்பில் இருக்கிறது.  அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே பெற்ற அறிவுரைகளின்படி வாக்கெடுப்பின்போது நடந்து கொள்வார்களாம்.  அந்த அறிவுரைக்கு கட்டுப்படாதவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு தெரிந்து விடும். அதன் பிறகு நடவடிக்கை பாயும் என்கிறது அதிமுக தரப்பு. உளவுத்துறை மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களை கண்காணித்து உளவுத்துறை மூலம் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.