அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : முக ஸ்டாலின் அறிக்கை..!
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டுமே 1613 கொலைகள் நடந்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற பேரவை இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரித்தார். இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ தனது ஆட்சிக்குக் கொலை போன்ற குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என்று உணர்வதோடு, சட்டமன்றத்திற்குத் தவறான தகவல்கள் தந்ததாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், முதல்வர் செய்த பச்சை பொய்ப் பிரச்சாரத்தின் ஈரம் காய்வதற்குள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டுமே 1613 கொலைகள் நடந்துள்ளது. இந்தியாவில் அதிக கொலைகள் நடந்த பட்டியலில் தமிழகம் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், 162 கொலைகளுடன் மாநகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்திலும் உள்ளது. இதன் பின்னராவது, முதல்வர் தமிழகக் காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். NCRB வெளியிட்ட கொலைகளின் அறிக்கையையும் ஷேர் செய்துள்ளார்.
#NCRB அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அதிகக் கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியலில்,
1613 கொலைகளுடன் தமிழகம் 6வது இடத்திலும்,
162 கொலைகளுடன் மாநகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்திலும் உள்ளது.
இதன் பின்னராவது, தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட முதலமைச்சர் அனுமதிப்பாரா? pic.twitter.com/tR63t812Yx
— M.K.Stalin (@mkstalin) October 23, 2019