அதிமுகவை எதிர்த்தவர்கள் அழிந்துவிட்டனர்: ஜெயக்குமார்

 

அதிமுகவை எதிர்த்தவர்கள் அழிந்துவிட்டனர்: ஜெயக்குமார்

அதிமுகவை எதிர்த்தவர்கள் அழிந்துவிட்டனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: அதிமுகவை எதிர்த்தவர்கள் அழிந்துவிட்டனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். திமுக ஆட்சிக்காலத்தில்தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருந்தது. இமயமலை போல் இருக்கும் அதிமுகவை எதிர்த்த நரகாசூரன்கள் அழிந்துவிட்டனர் என்றார்.