அதிமுகவுக்கு தோல்வி பயம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு!

 

அதிமுகவுக்கு தோல்வி பயம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு!

அதிமுக தோல்வி பயத்தில் தான் இரு தொகுதி இடைத்தேர்தல்களையும் தள்ளிவைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை : அதிமுக தோல்வி பயத்தில் தான் இரு தொகுதி இடைத்தேர்தல்களையும் தள்ளிவைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தைப் பொறுத்தவரை கனமழை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் கட்டி, இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் எனத் தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டதால், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர், ‘அதிமுக தோல்வி பயத்தில் தான் இரு தொகுதி இடைத்தேர்தல்களையும் தள்ளிவைத்துள்ளது. ஏற்கனவே 18 தொகுதிகளில் பிரதிநிதிகள் இல்லாததால் 40 லட்சம் மக்கள் பயனில்லாமல் இருக்கும் நிலையில் தற்போது 2 தொகுதிகளைச் சேர்த்து 45 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருக்கிறது’ என்று கூறினார். இதைத்  தொடர்ந்து ஓபிஎஸ் -தினகரன் குறித்த கேள்விக்கு, ‘ டி.டிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு உலக நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு அல்ல. அதனால் அது குறித்து தாம் பேச விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.