அதிமுகவுக்கு ஓட்டு போடலன்னா நலத்திட்ட உதவிகள் கிடையாது : தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ வின் சர்ச்சை பேச்சு !

 

அதிமுகவுக்கு ஓட்டு போடலன்னா நலத்திட்ட உதவிகள் கிடையாது : தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ வின் சர்ச்சை பேச்சு !

சாத்தூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து வாக்காளர்களின் இறுதி பட்டியல் வெளியானது. அதன் படி இன்று முதல் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. 

ttn

சாத்தூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய ராஜவர்மன், அதிமுகவுக்கு வாக்களித்தால் நான் மக்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன். அதிமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ராஜவர்மன் இவ்வாறு பேசியது அப்பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.