அதிமுகவில் நடக்கும் பூட்டு சண்டை… சாவியோடு காத்திருக்கும் ஸ்டாலின்..!

 

அதிமுகவில் நடக்கும் பூட்டு சண்டை… சாவியோடு காத்திருக்கும் ஸ்டாலின்..!

இந்தப்பிரிவினையை வைத்து திமுகவை சேர்ந்த ஐ.பெரியசாமி உடன்பிறப்புகளுக்கு உற்சாகமூட்டி சாவி கொடுத்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், இப்போது அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசனும் பயங்கரமாக மோதிக் கொள்கிறார்கள். ஜெ ஆட்சியிலேயே அசைக்க முடியாத அமைச்சராக இருந்தவன் நான்…  நீ ஒரு சுண்டைக்காய் என்கிற ரேஞ்சுக்கு பேசினாராம் நத்தம் விஸ்வநாதன். அதை கேட்ட  திண்டுக்கல் சீனிவாசன் ’நீ ரிடையர்டு.. நான் கரண்ட்.. என்னை தொட்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை ஷாக் அடிக்கும்’’ என்று மிரட்டுகிறாராம்.dindigaul

‘‘உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் அதிமுக சார்பில், சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் ஒன்றியச்செயலாளர் தலைமையில் நடந்தது. இதில் நத்தம் விஸ்வநாதனும், அவரது மருமகனும், மாநில பேரவை இணைச்செயலாளரும் மேடையில் பேசும்போது, அவர்களது ஆதரவாளர்கள் விசில் அடித்து தூள் கிளப்பி விட்டார்கள். இதனால் வெறுப்பான தொண்டர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். 

அடுத்ததாக, நத்தத்தில்  நடந்த கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டார். இதுதொடர்பாக விஸ்வநாதனுக்கு தகவல் தரவில்லை. அப்போது சீனிவாசன் பேசியது தான் பரபரப்பு. அதாவது தன் பேச்சில் நத்தம் விஸ்வநாதன் பற்றி எதுவும் பேசாமல் அவரின் மருமகனை புகழ்ந்து தள்ளிட்டார். இதனால நத்தம் ஆதரவாளர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள். அதை கேட்ட நத்தம் விஸ்வநாதன் ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக்கிறேன். அது ரிப்பேராகி வரும் பூட்டு. அது அவ்வளவுதான். அப்படி தான் பேசும்’’ என்று கூலாக சொல்லி வருகிறார்.

seenivasan

அது எப்படி என்னை ரிப்பேரான பூட்டு என்று சொல்லலாம். அவரு காயலாங்கடையில் போடப்பட்ட பூட்டு என்று தன் பங்குக்கு கலாய்க்கிறார் சீனிவாசன். ஆக மொத்தம் அடிப்பொடிகள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தகவல்களை பாஸ் செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறார்கள்.

இந்தப்பிரிவினையை வைத்து திமுகவை சேர்ந்த ஐ.பெரியசாமி உடன்பிறப்புகளுக்கு உற்சாகமூட்டி சாவி கொடுத்து வருகிறார்.