அதிமுகவில் இப்படியெல்லாமா நடக்கிறது..? ஆட்களையே மாற்றி எடப்பாடி அதிரடி..!

 

அதிமுகவில் இப்படியெல்லாமா நடக்கிறது..? ஆட்களையே மாற்றி எடப்பாடி அதிரடி..!

இதற்காக, மூத்த அமைச்சர்கள் சிலர், பணப் பட்டுவாடாவுக்கு தங்களுக்கு நெருக்கமான சிலரை தேர்வு செய்து இருக்கிறார்களாம். இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா?

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தேர்தல் செலவுக்காக தலைமை தரும் பணத்தை, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு செலவழித்து அவர்களும்  கடுமையாக உழைத்தார்கள். அதே போல வாக்காளர்களுக்கும், கட்சி மேலிடம் கொடுத்த பணம், சிந்தாமல் சிதறாமல் போய் சேர்ந்து விடும்.

ஆனால், சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க  சார்பில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை நிர்வாகிகளே பதுக்கி விட்டார்கள்.  கட்சி தொண்டர்களுக்கும் பணம் போகாமல், அ.தி.மு.க.,வுக்கு படுதோல்வி தான் பரிசாக கிடைத்தது.

இதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், பணம் முறையாகப் போய்ச் சேர, கட்சிக்கு சம்பந்தமே இல்லாத பொதுவான நபர்கள் மூலமாக வழங்க அ.தி.மு.க., தலைமை முடிவு செய்திருக்கிறது. இதற்காக, மூத்த அமைச்சர்கள் சிலர், பணப் பட்டுவாடாவுக்கு தங்களுக்கு நெருக்கமான சிலரை தேர்வு செய்து இருக்கிறார்களாம். இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா?