அதிமுகவால் ஏற்பட்ட விபத்துக்கு திமுக செய்த பரிகாரம்..! டிவிட்டரில் விளாசும் ஸ்டாலின்…!
இன்னும் கூட சுயநினைவுக்குத் திரும்பாத அனுராதாவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி காலை பணிக்கு செல்வதற்காக அனுராதா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கோல்டுவின்ஸ் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் அனுராதா நிலை தடுமாறி விழுந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த லாரி, அனுராதாவின் கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுராதா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் கூட சுயநினைவுக்குத் திரும்பாத அனுராதாவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்தே அவரது வலது காலில் உள்ள எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனுராதாவின் குடும்பம் மேற்கொண்டு சிகிச்சை எடுக்க, செய்வதறியாது திகைத்து போயுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள #Anuradha-வுக்கு ஆறுதல் கூறினேன்.
திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன்.
அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது! pic.twitter.com/58GqpAaRoJ
— M.K.Stalin (@mkstalin) November 17, 2019
இந்நிலையில் முக ஸ்டாலின் மருத்துவனைக்கு சென்று அனுராதா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள #Anuradha-வுக்கு ஆறுதல் கூறினேன்.
திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது!’ என்று பதிவிட்டுள்ளார்.