அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் சிம்பு… அடுத்தடுத்து செய்கிற காரியத்தால் திரையுலகினர் அதிர்ச்சி..!?

 

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் சிம்பு… அடுத்தடுத்து செய்கிற காரியத்தால் திரையுலகினர் அதிர்ச்சி..!?

நடிகர் சிம்பு இப்போது சுத்தமாக மாறிவிட்டாராம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிக்க மாநாடு என்ற படத்தை எடுக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது சொன்ன நேரத்தில் சிம்பு கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். அதோடு தாய்லாந்தில் போய் தங்கிக்கொண்டு பல நாட்கள் போன் எடுக்காமல் தொடர்பிலிருந்து விலகியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தொடங்க முடியாமல் தவித்தார். 

நடிகர் சிம்பு இப்போது சுத்தமாக மாறிவிட்டாராம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிக்க மாநாடு என்ற படத்தை எடுக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது சொன்ன நேரத்தில் சிம்பு கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். அதோடு தாய்லாந்தில் போய் தங்கிக்கொண்டு பல நாட்கள் போன் எடுக்காமல் தொடர்பிலிருந்து விலகியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தொடங்க முடியாமல் தவித்தார். 

simbu

அப்போதுதான் இனி மாநாடு படத்தில் சிம்பு நடிக்க மாட்டார். என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதன் முறையாக சிம்புவை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று துணிச்சலுடன் சொன்னது சுரேஷ் காமாட்சிதான். இதனால் திரையுலகினர் அதிர்ச்சிஅடந்தனர். இந்நிலையில் இயக்குநர் சீமான் இந்த விஷயத்தில் தலையிட்டு சிம்புவிடம் பேசினார். தயாரிப்பாளரையும் சமாதானம் செய்து மாநாடு படத்தை மீண்டும் தொடங்க வைத்தார்.  

simbu seeman

சிம்புவை சந்தித்து மனம் விட்டு பேசினார் சுரேஷ் காமாட்சி. இதனால் சிம்பு மனம் மாறி அன்றே அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்தார். அதோடு அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து ஹாரிங்டன் ரோடு பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சியும், அதை முடித்து விட்டு லீலா பேலஸ் ஹோட்டலில் நீச்சல் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார்.  மதியம் சாப்பிட்டு விட்டு நன்றாக தூக்கம் போடுகிறார். மாலையில் எழுந்து ஹயாத்  ஹோட்டலில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுகிறார். இப்படி தனமும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து வருகிறாராம். சிம்புவின் இந்த மாற்றத்தைப் பார்த்த குடும்,பத்தினர். நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

simbu

இதற்கிடையில் மாநாடு படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் வெங்கட் பிரபு லாரென்ஸ் மாஸ்டரை வைத்துப் படம் எடுக்கப் போயிட்டார் என்று கோடம்பாக்கம் முழுக்க ஒரு செய்தி உலவுகிறது.அது உண்மையா பொய்யா தெரியாது..! ஜனவரி 20-ஆம் தேதி மாநாடு படத்தின் படப்பிடிப்புதொடங்குகிறது.