அதிகாலையில் கோர விபத்து ! ஏர்பேக் இருந்தும் தொழிலதிபர் பலியான பரிதாபம் !

 

அதிகாலையில் கோர விபத்து ! ஏர்பேக் இருந்தும் தொழிலதிபர் பலியான பரிதாபம் !

விபத்தின்போது காரில் இருந்த ஏர்பேக் விரிந்தும் பலனின்றி பிரபல ஓட்டல் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
திருச்செந்தூரில் அர்ச்சனா ஓட்டல், தங்கும் விடுதி மற்றும் காபி, தேனீர் விடுதி நடத்தி வந்தவர் அதிபர் கிட்டப்பா. ஆன்மிகவாதியான கிட்டப்பா, திருச்செந்தூர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலனமானவர். இவரும் இவரது நண்பருமான திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபருமான ராதாகிருஷ்ணனுடன் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

விபத்தின்போது காரில் இருந்த ஏர்பேக் விரிந்தும் பலனின்றி பிரபல ஓட்டல் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்

kittappaa

திருச்செந்தூரில் அர்ச்சனா ஓட்டல், தங்கும் விடுதி மற்றும் காபி, தேனீர் விடுதி நடத்தி வந்தவர் அதிபர் கிட்டப்பா. ஆன்மிகவாதியான கிட்டப்பா, திருச்செந்தூர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலனமானவர். இவரும் இவரது நண்பருமான திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபருமான ராதாகிருஷ்ணனுடன் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

accident

காரை கிட்டப்பா ஓட்டி சென்ற நிலையில், முக்காணி அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையோரம் இருந்த புளியமரம் மீது வேகமாக மோதியது. அதிகாலை நிகழ்ந்த விபத்தில் ஓட்டல் அதிபர் கிட்டப்பாக உயிரிழந்தார். அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் படுகாயங்களுடன் தூத்துக்குடி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார்.

death

இது ஒரு புறம் இருக்க, கார் புளிய மரத்தில் மோதியபோது காரில் இருந்த ஏர்பேக் விரிந்துள்ளது. ஆனாலும், இந்த விபத்தில் கிட்டப்பா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல ஹோட்டல் அதிபர் இறந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிகாலை என்பதால் தூக்கக் கலத்தில் விபத்து ஏற்பட்டதா அல்லது காரில் வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணமாக என போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.