‘அதற்கு’ சம்மதம் சொல்லாத காதலன்: கடுப்பில் ஆசிட் வீசிய காதலி!

 

‘அதற்கு’ சம்மதம் சொல்லாத காதலன்:  கடுப்பில் ஆசிட் வீசிய காதலி!

என் மகன் கடந்த மாதத்திலிருந்து அந்த பெண்ணிடம்  பேசுவதை நிறுத்தி கொண்டான்

புதுடெல்லி:  திருமணத்துக்குச் சம்மதிக்காத காதலன் மீது, காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

love

டெல்லி ஆக்ராவுக்கு அருகில் உள்ள ஜீவங்கர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயதே ஆன இளம்பெண் ஒருவர் காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், டெல்லி ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அந்த இளைஞருக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

acid

இந்நிலையில் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து கூறும் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார், என் மகனும், அந்த பெண்ணும் காதலித்து வந்தார்கள். என் மகன் கடந்த மாதத்திலிருந்து அந்த பெண்ணிடம்  பேசுவதை நிறுத்தி கொண்டான். இருப்பினும் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள் என்று என் மகனை வற்புறுத்தி வந்தாள்.  அதற்கு என் மகன் மறுப்பு தெரிவிக்கவே, என் வீட்டின் அருகில் கடையில் நின்று கொண்டிருந்த என் மகன் மீது அந்த பெண் ஆசிட் வீசிவிட்டாள்’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.