அண்ணாவின் புகழை எந்நாளும் போற்றிடுவோம்: திமுக தலைவர் முக ஸ்டாலின்

 

அண்ணாவின் புகழை எந்நாளும் போற்றிடுவோம்: திமுக தலைவர் முக ஸ்டாலின்

திராவிடக் கட்சி தலைவர் அண்ணா அவர்களின் புகழை எந்நாளும் போற்றிடுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை: திராவிடக் கட்சி தலைவர் அண்ணா அவர்களின் புகழை எந்நாளும் போற்றிடுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் 6-ஆவது முதலமைச்சரும், திராவிடக் கட்சி தலைவருமான அண்ணாதுரை நினைவு நாளான இன்று, அவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

 

அண்ணா குறித்து அவர், மாநில சுயாட்சி’க்கு முதன்முதலில் வித்திட்ட தலைவர். இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவர் புகழை எந்நாளும் போற்றிடுவோம் என பதிவிட்டுள்ளார்.