“அண்ணனுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவருடன் தூக்கில் தொங்கிய பெண்” வீட்டை விற்ற சோகத்தால் நடந்த விபரீதம்!

 

“அண்ணனுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவருடன் தூக்கில் தொங்கிய பெண்” வீட்டை விற்ற சோகத்தால் நடந்த விபரீதம்!

ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுடன் முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகமும்  தங்கி இருந்தார்.

சென்னை கொடுங்கையூரை அடுத்த எருக்கஞ்சேரி இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி கரிகாலன். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும்,  குணவதி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுடன் முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகமும்  தங்கி இருந்தார்.

ttn

இந்நிலையில் நேற்றுகாலை இவர்களின் வீட்டு  கதவு வெகுநேரமாகியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது, ஆறுமுகம் வாயில் நுரை தள்ளியபடி கிடக்க, கரிகாலன் மற்றும் முனியம்மாள் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த  எம்.கே.பி. நகர் போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கரிகாலன் மகள் குணவதி திருமண செலவுக்காக குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து 7 லட்சம்  வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு 3 மாதம் வட்டிகட்டி உள்ளார்.  ஆனால்  கரிகாலனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படவே அவரால் வட்டி கட்ட முடியாமல் போயுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டை விற்று கடனை அடைக்கலாம்  என்று  முடிவெடுத்த நிலையில் இதுதொடர்பாக கரிகாலனுக்கும் அவரது மகன் , ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டு அவர் வீட்டைவிட்டு வெறியேறி தனியாக சென்றுள்ளார்.

ttn

இதை தொடர்ந்து வீட்டை விற்ற கரிகாலன் வட்டியும் முதலுமாக கடனை அடைத்துள்ளார். இருப்பினும் வீட்டை வாங்கியவர்கள் வீட்டை காலிசெய்ய 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் வ  வாழ்ந்த வீட்டை விட்டு போகிறோமே? இனி எங்கு செல்வோம் என்று யோசித்த அந்த தம்பதி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் முனியம்மாள் தனது அண்ணனுக்கு விஷம் கொடுத்துள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் வீட்டில் தூக்கில்  தொங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.