அண்ணனின் திடீர் மரணம்: நின்று போனது தங்கையின் திருமணம்!

 

அண்ணனின் திடீர் மரணம்: நின்று போனது தங்கையின் திருமணம்!

லையில் பலத்த காயம் ஏற்பட்டநிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி : அண்ணனின் திடீர் மரணத்தால் தங்கையின் திருமணம் நின்று போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  சண்முகம் – செல்லத்தாயி தம்பதி. இவர்களுக்கு  3 மகள்கள் மற்றும் தனபால் என்ற ஒரு மகன் உள்ளனர்.  மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் மூன்றாவது மகள் மீனாவுக்கு  திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குமரன் என்ற மணமகனுடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

 

marriage

இந்நிலையில் மணப்பெண்ணின் அண்ணன் தனபால் கழிவறைக்கு செல்லும் போது  எதிர்பாராத விதமாக கால் தவறி  தண்ணீர் இல்லாத கிணற்றில்  விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டநிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

dhanapal

இதையடுத்து தகவலறிந்து வந்த வாத்தலை போலீசார்  தனபாலின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம்  பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.அண்ணன் தனபாலின் இந்த திடீர் மரணத்தால் நேற்று நடக்கவிருந்த அவர் சகோதரியின் திருமணமும் நின்று போய் விட்டது. இதனால் குருவம்பட்டி கிராமமே  சோகத்தில் மூழ்கியுள்ளனர்.