அண்டாவிலிருந்த வெந்நீர்.. விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

 

அண்டாவிலிருந்த வெந்நீர்.. விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

கடந்த மாதம் சென்னை திருவொற்றியூர்  அருகே 2 வயது பெண் குழந்தை வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீப காலமாகக் குழந்தைகள் இறப்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் சென்னை திருவொற்றியூர்  அருகே 2 வயது பெண் குழந்தை வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து பெரிய பாளையம் அருகே மீண்டும் ஒரு குழந்தை வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

ttn

பெரிய பாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி என்னும் பகுதியில் வசித்து வரும் தம்பதி கஜேந்திரன்- குப்பம்மாள். இவர்களுக்கு நித்திய ஸ்ரீ என்னும் 4 வயது மகள் இருந்தார். வழக்கமாக குப்பம்மாள் நித்தியஸ்ரீயை வெந்நீரில் தான் குளிக்க வைப்பாராம். அதே போல நேற்றும் குளிக்க வைப்பதற்காக அண்டாவில் வெந்நீர் போட்டு வைத்து விட்டு, கேஸை நிறுத்துவதற்காக வீட்டினுள் சென்றுள்ளார். அப்போது அந்த வெந்நீரின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நித்திய ஸ்ரீ, வெந்நீருக்குள் தவறி விழுந்துள்ளார்.  

ttn

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குப்பம்மாள், உடனே நித்தியஸ்ரீயை  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நித்தியஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை நித்திய ஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.