அணையில் இருந்து நீர் எடுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

 

அணையில் இருந்து நீர் எடுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக அந்த நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என கூறியிருந்தது.

இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிநீர் தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் நீர் எடுக்கக்கூடாது என கோரி திமுகவை சேர்ந்த ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுக்க தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.