அணில் கறி சாப்பிட்ட தம்பதி பரிதாப பலி: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

அணில் கறி  சாப்பிட்ட தம்பதி பரிதாப பலி: அதிர்ச்சி தரும் சம்பவம்!

மங்கோலியா நாட்டில் அணிலை சமைக்காமல் சாப்பிட்ட தம்பதி  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மங்கோலியா: மங்கோலியா நாட்டில் அணிலை சமைக்காமல் சாப்பிட்ட தம்பதி  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகச் சிலர் வழக்கமான சிக்கன், மட்டன் உணவுகளைத் தவிர்த்து  அணில், முயல் போன்ற பிராணிகளை சமைத்து உண்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அதில் கூடுதல் சத்து கிடைக்கும் என்றும் நம்புவார்கள். 

anil

அந்தவகையில் மங்கோலியாவுக்கு சுற்றுலா வந்த தம்பதி , அணிலை பிடித்து, அதனைச் சமைக்காமல், உண்டனர்.  அணிலை சமைக்காமல் அப்படியே உண்டால் உடல் வலிமையாகும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்துள்ளது. இதனால் அவர்கள் இதை விளையாட்டாகச் செய்துள்ளனர்.

murder

இந்நிலையில் அணிலை சாப்பிட்டதை அடுத்து அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காகக் கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு பிளேக் நோய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  இதனால் அவர்களுக்கு பிளேக் நோய்க்கான சிகிச்சை   அளித்துவந்தும்  சிகிச்சை பலன் அளிக்காமல் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அணிலை சாப்பிடாததால் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.