அட ராமா! ராமர் கோவில் கட்டும் ட்ரஸ்டிலும் மோதல் வெடிக்கிறது!.
வருடக்கணக்காக கோர்ட் படி ஏறி வழக்கில் வென்றும் மகிழ்ச்சி இல்லை காவி இயக்கங்களான ஆர்.எஸ்.எஸுக்கும்,வி.ஹெச்.பிக்கும். ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளை தலைவராக இருக்கும் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவர் அந்த இயக்கங்களின் தலைவர்களைப் புறக்கணித்தது தவறு என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
வருடக்கணக்காக கோர்ட் படி ஏறி வழக்கில் வென்றும் மகிழ்ச்சி இல்லை காவி இயக்கங்களான ஆர்.எஸ்.எஸுக்கும்,வி.ஹெச்.பிக்கும். ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளை தலைவராக இருக்கும் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவர் அந்த இயக்கங்களின் தலைவர்களைப் புறக்கணித்தது தவறு என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
அயோத்தி சாதுக்கள் இடையே மிகுந்த செல்வாக்கு உள்ளவரான கோபால் தாஸ் எளிதில் புறக்கணிக்க முடியாதவர்.கோவில் கட்டுமானப்பணிகள் துவங்க வேண்டிய நேரத்தில் அவர் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது கடும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
கோபால் தாஸை சமாதானப்படுத்த மத்திய அரசும்,உ.பி மாநில அரசும் தீவிரமாக முயன்று வருகின்றன.அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அயோத்தி எம்.எல்.ஏ வேத் பிரகாஷ் குப்தா தலைமையில் ஒரு மூவர்குழு அமைக்கபட்டு இருக்கிறது.
இந்தக் குழு நேற்று இரண்டு முறை கோபால் தாஸை சந்திக்க முயன்றபோது கோபால் தாஸ் தரப்பினர் அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர்.உள்துறை அமைச்சர் நேரடியாகத் தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சொன்னதையும் அவர்கள் ஏற்கவில்லை. அயோத்தி ராமர் கோவில் சிக்கல் அவளவு சீக்கிரம் முடியாது போல இருக்கிறதே.