அட பாவிகளா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா? வைரல் வீடியோ பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்

 

அட பாவிகளா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா? வைரல் வீடியோ பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்

தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

சென்னை: தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள் கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கிறது. அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

டிக்-டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூக பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

tik tok

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது என்று நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

தற்போது டிக் டாக் செயலி மீதான் தடை நீக்கப்பட்டதையடுத்து, டிக் டாக் பிரியர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். பிரபல காமெடி நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் அப்படி ஒரு வித்தியாசமான டிக் டாக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் நடித்த ‘சாமி’ திரைப்படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியை வீட்டில் உள்ள வளர்ப்பு நாயுடன் சேர்த்து இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்த வீடியோவை நடிகர் விவேக் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், ‘அட பாவிகளா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லையே இல்லையா?’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.