அட கொடுமையே…  பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா? 

 

அட கொடுமையே…  பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், மூன்று வாரத்தை கடந்துவிட்டது. வார இறுதி என்பதால் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அதில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டார் என்று கமல் நேற்று அறிவித்தார். 

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு விஷயம் ஒற்றுப்போவது காதல். ஓவியா, ஆரவ் தொடங்கி யாஷிகா, மஹத் என்று ஒரு ஒரு சீசன்னிலும் ஒரு காதல் ரோஜா மலர்கிறது. அந்த வகையில் இந்த முறை லிஸ்டில் மாற்றிக்கொண்டது கவின் மற்றும் சாக்ஷி. தற்போது அந்த காதல் மட்டுமில்லாமல் புதிதாக ஒரு காதல் ஜோடி இருக்கிறது என்று ஒரு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளனர். இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

அதில், தர்ஷனிடம், ஷெரின் நீ மீராவிற்கு புரபோஸ் செஞ்சியா? என்று கேட்டுள்ளார். ஆனால் அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்றும் தர்ஷன் கூறினார். இதுகுறித்து மீரா கூறுகையில், ‘ நாம் ஏதாவது ஒண்ணு சொன்னால், அது திரிச்சி திரிச்சி எங்கேயோ போய் எப்படியோ முடிகிறது. நான் யார் கிட்டப்பா தர்ஷனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன்’ என்று கேட்டுள்ளார். 

இந்த நிலையில் சீரியஸாகி சென்று கொண்டிருக்கும் இந்த உரையாடலை  திசை திருப்பும் முயற்சியில் ஜாலியாக கமல்ஹாசன் கவினிடம், ‘நீங்கள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள், நீங்கள் தான் இதற்கு சரியான நபர் என்று கூற பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் கைதட்டி சிரித்தனர்.

அப்போது கவின், ‘சார் நானே என் பிரச்சனையைத் தீர்க்க முடியாம ஜெயிலுக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கேன், நீங்க என்னைப்போய் கோர்த்து விடுகின்றீர்களே என்று கூற கலகலப்புடன் புரோமோ முடிந்துள்ளது.