அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைக்கவும்…உதவி இயக்குனரை உரிச்செடுத்த நடிகை !

 

அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைக்கவும்…உதவி இயக்குனரை உரிச்செடுத்த நடிகை !

கார்த்திக் என்பவர் தன்னை துணை இயக்குநர் எனக் கூறிக்கொண்டு சஜிதாவின் மொபைலுக்கு அழைத்து பேசியிருக்கிறார். உங்கள் வயதென்ன?, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?, என தொடர்ந்த கேள்வி பாலியல் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாரா என முடிந்திருக்கிறது.

ஷட்டர் படத்துக்காக கேரள அரசின் மாநில விருதை வென்றவர் துணை நடிகை சஜிதா மடதில். தியேட்டர் கலைஞரான இவர், மிகத் தைரியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கக் கூடியவர்.

கார்த்திக் என்பவர் தன்னை துணை இயக்குநர் எனக் கூறிக்கொண்டு சஜிதாவின் மொபைலுக்கு அழைத்து பேசியிருக்கிறார். உங்கள் வயதென்ன?, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?, என தொடர்ந்த கேள்வி பாலியல் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாரா என முடிந்திருக்கிறது. தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி இதனை கேட்டுள்ளார் அந்த நபர்.

saj

இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த சஜிதா, நான் இதுபோன்ற கேள்விகளை சந்தித்தது இல்லை. எனக்கு இது மிகவும் அதிர்ச்சி அளித்தது. இதேபோன்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்பீர்களா அல்லது வாய்ப்பு தேடும் பெண்களிடம் மட்டும் கேட்பீர்களா என்று கேட்டேன். பின்னர் அவனுடைய நம்பரை டிரேஸ் செய்து, வேறு நபர் போல பேசி, படத்தை பற்றிய விபரங்களை கூறுமாறு கேட்டேன். அப்போதும் அவன் இதேபோல பாலியல் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாரா என்றபடியே பேசினான் என்றார்.

saji

அதன்பிறகு சஜிதா செய்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனக்கு நடந்த அனுபவங்கள் குறித்து எழுதி, கார்த்தியின் மொபைல் நம்பரோடு அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதேபோல் இந்த அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைத்து பேசுங்கள் எனவும் பதிவிட்டிருந்தார். அத்தோடு நில்லாமல் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

sajith

கார்த்தியின் மொபைல் தற்போது ஸ்விட்ச் ஆப்பில் உள்ளது. இப்படி துணிச்சலாக செயல்பட்டது குறித்து சஜிதா, இவனை போன்றவர்கள் பெண்கள் அட்ஜெஸ்ட் செய்யவேண்டும் என்பதை இயல்பான செயலாக மாற்றிவிடுவார்கள். இது அடுத்த தலைமுறை நடிகர்களை பாதிக்கும். அதனால்தான் இதனை பொதுவெளிக்கு கொண்டுவர நினைத்தேன். எனக்கு இத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இனி திரைத்துறையில் உள்ளவர்கள் பெண்களிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்க யோசிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்க: முன்னாள் முதல்வர் மகன் கொலை: சொத்துக்காக மனைவியே கொன்றதாக பகீர் தகவல்?!