அடுத்த 3 நாட்களில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 3 நாட்களில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 நாட்களில் மழை அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: அடுத்த 3 நாட்களில் மழை அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்து விட்டது. தமிழகத்தின் உள்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 3 நாட்களில் மழை அளவு படிப்படியாக குறைந்துவிடும். இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.