அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ttn

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிக பட்சம் 33 டிகிரி வெப்ப நிலையும் குறைந்த பட்சம் 25 டிகிரி வெப்ப நிலையும் நிலவும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகமான வெப்ப நிலை இருக்காது என்றும் அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 50 மி.மீ மழையும் கொடைக்கானலில் 30 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.