‘அடுத்த ரெண்டு வருஷத்துக்கு என்கிட்டருந்து படம் எதையும் எதிர்பாக்காதீங்க’…பிரபல டைரக்டர் கண்ணீர்…

 

‘அடுத்த ரெண்டு வருஷத்துக்கு என்கிட்டருந்து படம் எதையும் எதிர்பாக்காதீங்க’…பிரபல டைரக்டர் கண்ணீர்…

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ‘தேவி 2’படம் பார்த்துவிட்டு விரக்தியின் விளிம்புக்கு சென்றவர்களில் நீங்களும் ஒருவர் எனில் இந்த நற்செய்தி கண்டிப்பாக உங்களுக்கானதுதான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கம்ர்சியல் சினிமாக்கள் எடுக்கும் வேலைக்கு ரெஸ்ட் கொடுத்து ‘தலைவி’படத்தில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபடப்போகிறாராம் அவர்.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ‘தேவி 2’படம் பார்த்துவிட்டு விரக்தியின் விளிம்புக்கு சென்றவர்களில் நீங்களும் ஒருவர் எனில் இந்த நற்செய்தி கண்டிப்பாக உங்களுக்கானது தான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கம்ர்சியல் சினிமாக்கள் எடுக்கும் வேலைக்கு ரெஸ்ட் கொடுத்து ‘தலைவி’படத்தில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபடப்போகிறாராம் அவர்.

தியாகராஜன் குமாரராஜா, விகரம் சுகுமாரன்[மதயானைக்கூட்டம்], சாந்தகுமார்[மவுனகுரு] என்ற அபாரமான படங்களைக் கொடுத்த டைரக்டர்கள் எல்லாம் அடுத்த படம் கிடைக்காமல் ஏழெட்டு வருடங்கள் காத்திருக்கும் நிலையில் சுமார்,சுமாருக்கும் கீழ், மற்றும் குப்பைப் படங்களைக் கொடுக்கும் ஏ.எல்.விஜய் மட்டும் எப்படி ஆறு மாதங்களுக்கொருமுறை அடுத்தடுத்து படங்களை ஈன்று தள்ளுகிறார் என்பது நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

இப்போதைக்கு அந்த கேள்விக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம். ஜெயலலிதாவின் சுயசரிதையான’தலைவி’படத்தை வரும் ஜூலை அல்லது ஆகஸ்டில் துவங்கவிருக்கும் இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்கி முடிக்க இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகும் என்கிறார். ஜெயலலிதாவின் 16 வயதிலிருந்து துவங்கும் இக்கதைக்காக பல்வேறு மெனக்கெடல்கள் மேற்கொள்ளவேண்டியிருப்பதால் மீண்டும் 2022ல் தான் தன்னால் கமர்சியல் சினிமா பக்கமே திரும்பமுடியும் என்று கவலை தெரிவிக்கிறார்விஜய். நீங்க கவலைப்படுறதுல எங்களுக்கு சந்தோஷம் பாஸ்.