அடுத்த மோடியாக, எடப்பாடி உருவெடுத்து விட்டார்! ஸ்டாலின் விளாசல்

 

அடுத்த மோடியாக, எடப்பாடி உருவெடுத்து விட்டார்! ஸ்டாலின் விளாசல்

முதலமைச்சர் விரைவில் வெளிநாடு சுற்று பயணம் செல்ல உள்ளார், மோடி சுற்று பயணம் செய்து வந்த நிலையில் தற்போது எடப்பாடி தொடங்கி இருக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாத நிலையிலும் சரி மக்களுக்கு பணி ஆற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சி தான் திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது. காமராஜரிடம் அறிவுரை கேட்பதற்காகவே கருணாநிதி அவரது இல்லத்திற்கு சென்றார். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விதம் தவறு என்பதை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தினோம். முதலமைச்சர் விரைவில் வெளிநாடு சுற்று பயணம் செல்ல உள்ளார். முதல்வரின் சுற்றுப்பயணம் நாட்டுக்கு முதலீடா அல்லது அவருக்கு முதலீடா என்பது தெரியவில்லை” எனக் கூறினார்.