அடுத்த மெகா ரெய்டு… ஆடிப்போய் அதிர்ந்து கிடக்கும் தி.மு.க புள்ளிகள்..!

 

அடுத்த மெகா ரெய்டு… ஆடிப்போய் அதிர்ந்து கிடக்கும் தி.மு.க புள்ளிகள்..!

தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து வரும் நிலையில் வருமான வரித்துறை சோதனையால் தூக்கம் தொலைந்து தவிக்கிறது தி.மு.க.

தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து வரும் நிலையில் வருமான வரித்துறை சோதனையால் தூக்கம் தொலைந்து தவிக்கிறது தி.மு.க.

தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி, நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சிமெண்ட் குடோனின் வார்டு வாரியாக பட்டுவாடா செய்ய மூட்டைகளிலும், பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது திமுகவின் இமேஜை டேமேஜ் ஆக்கி விட்டது. ’நான் பனங்காட்டு நரி’ என முழங்கிய துரைமுருகனின் பெயர் இப்போது நாரிக் கிடக்கிறது. 

தேர்தல் நேரத்தில் பொதுவாக ஆளுங்கட்சியிடம்தான் கரன்ஸி கரைபுரள்வதாக புகார் எழும். இப்போது எதிர்க்கட்சியான தி.மு.க-வின் ’பொருளாதாரமே’ சிக்கியிருக்கிறது. இதனால், ‘இரண்டு முறையா ஆட்சியில் இல்லாத நிலையிலும் திமுகவிடம் இவ்வளவு பணம் கரைபுரள்கிறதே… இவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் அடுத்தும் அராஜாகம் தொடரும்’ என பொருமித் தள்ளுகிறார்கள் பொதுமக்கள். 

IT raid

பொதுமக்களின் ஆதங்கம் இப்படி இருக்க, அடுத்த ரெய்டில் சிக்கப்போவது யாரோ என விழிபிதுங்கித் தவிக்கிறது தி.மு.க. இந்த நிலையில் தி.மு.க புள்ளிகளை கலங்கடிக்கும் வகையில், ‘அடுத்து விழுப்புரம் பொன்முடி, திருச்சி கே.என்.நேரு, நீலகிரி ராசா, தூத்துக்குடி கனிமொழி, திண்டுக்கல் பெரியசாமி ஆகியோரை குறிவைத்து ஒரே நேரத்தில் மிகப்பெரிய சோதனை நடத்தப்பட இருக்கிறது. துரைமுருகன் சம்பவத்துக்கு பிறகு இவர்களெல்லாம் தங்களின் பணத்தை எங்கே கொண்டு போய் பதுக்கினார்கள் என்பது எங்களுக்கு தெரியும். துரைமுருகனை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே இவர்களையும் நோட்டம் விட்டு தொடர்கிறார்கள். விரைவில் அதிரடி சோதனை நடக்கும்’’ என பகீர் கிளப்பி வருகின்றனர். இதைக்கேட்டு அதிர்ந்து கிடக்கிறது தி.மு.க வட்டாரம். 

அரசியல் ரீதியான அழுத்தங்கள் போதாதென்று, இப்படி கட்சியின் பெயரும் ரெய்டு வடிவில் வாட்டி வதைப்பதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!