அடுத்த முறை அத்திவரதர் வரும் போதும் அதிமுக தான் ஆட்சியில் இருக்கும்! ஜெயக்குமார் அதிரடி

 

அடுத்த முறை அத்திவரதர் வரும் போதும் அதிமுக தான் ஆட்சியில் இருக்கும்! ஜெயக்குமார் அதிரடி

அடுத்த முறை அத்திவரதர் வரும் போதும் அதிமுக தான் ஆட்சியில் இருக்கும்! ஜெயக்குமார் அதிரடி

சென்னை ராயப்பேட்டையில் சித்தி புத்தி விநாயகர் கோயிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சமபந்தி விருந்து நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘ அத்திவரதர் மீண்டும் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் போதும் அதிமுக தான் ஆட்சியில் இருக்கும்’ என்றார்.

கடப்பாரையை சாப்பிட்டு விட்டு சுக்கு கசாயம் சாப்பிடுவது திமுக தான் என்று, நீட் விவகாரத்துக்காக சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இந்த பதிலை அளித்துள்ளார். மேலும், சாதிகள் இல்லை என்பதே அரசின் நிலை; பள்ளிக்கல்வியின் சுற்றறிக்கையை கனிமொழி வரவேற்றது நல்ல விஷயம் என்றும், செவி கொடுத்து விட்டு செவி சாய்க்கும் அரசு தமிழகத்தில்தான் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.