அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வராவிட்டால் தற்கொலை – ஷாருக்கானை மிரட்டும் ரசிகர்கள்

 

அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வராவிட்டால் தற்கொலை – ஷாருக்கானை மிரட்டும் ரசிகர்கள்

நடிகர் ஷாருக்கான் அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WEWANTANNOUNCEMENTSRK HASHTAG

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த இந்த படம் மிக வேகமாக தியேட்டரைவிட்டு ஓடியது. இதனால், ஷாருக்கான் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள, அதிரடியாக புது படம் ஒன்றை அறிவிப்பார் என்று ஷாருக் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஓராண்டு முடிந்த நிலையில் அடுத்த படம் எதுவும் வரவில்லை. படத்திற்கான அறிவிப்பு கூட இல்லை. இதனால், 2019ம் ஆண்டு ஷாருக் ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஆண்டாக உள்ளது. இப்போது அறிவிப்பு வெளியானால்தான் குறைந்தது 2020 இறுதியிலாவது திரைப்படம் வெளியாகும். அப்படி இல்லை என்றால், 2020ம் ஆண்டும் ஷாருக் படம் வெளியாகாத நிலை ஏற்படும் என்ற கவலை ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது.
இதனால், ஷாருக்கான் தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் ஷாருக் ரசிகர்கள் உருவாக்கிய #WeWantAnnouncementSRK ஹேஷ் டேக் டிரெண்ட ஆக ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு ரசிகர், “ஷாருக் சாப் போதும் போதும், ஜீரோ படத்துக்குப் பிறகு வேறு எந்த ஒரு படத்தையும் நான் பார்க்கவில்லை. நீங்கள் இல்லாமல் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனவே, எனக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்லுங்கள். தூம் அல்லது அட்லி இயக்கத்திலாவது நடிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பல ரசிகர்கள் உடனே படத்துக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.