அடுத்த தேர்தலிலும் நாமே வெற்றி பெறவேண்டும்! எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

 

அடுத்த தேர்தலிலும் நாமே வெற்றி பெறவேண்டும்! எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது

அடுத்த தேர்தலிலும் நாமே வெற்றி பெறவேண்டும்! எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெரும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல, அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும்

பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்கள் துறை வாரியாகவும், தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆளுநர் உரையை வெளிநடப்பு செய்யாமல் முழுமையாக கவனித்த எதிர்க்கட்சியாக அதிமுக விளங்குகிறது.” என தெரிவித்தார்.