அடுத்த ஐபிஎல் தொடரில் விலகுகிறார் தல தோனி…?

 

அடுத்த ஐபிஎல் தொடரில் விலகுகிறார் தல தோனி…?

முதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்கு தலைமை தாங்கிவருவபர் தோனி. சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் என்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாகித்தனர். ஆக மொத்தத்தில் சென்னை அணிக்கு தோனி தான் தீனி..!

முதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்கு தலைமை தாங்கிவருவபர் தோனி.  சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் என்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாகித்தனர். ஆக மொத்தத்தில் சென்னை அணிக்கு தோனி தான் தீனி..!dhoni

 மும்பையை அணியை பொறுத்தவரை சச்சினிடம் தொடங்கி, ரோஹித் கையில் வந்து நிற்கிறது கேப்டன் ஷிப். ரோஹித் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை பெற்று தந்துள்ளார்.  தோனி இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், 2019 ஐபிஎல் தொடரின் முடிவில், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.  இதற்கு பதில் அளித்த தோனி மய்யமாக பதில் சொல்லி, தெளிவாக குழப்பி விட்டார். dhoni

2019 ஐபிஎல் தொடரில் தோனியின் அற்புதமான கேப்டன்சியால் இறுதிப் போட்டி வரை முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இறுதிப் போட்டியில் வெறும் 1 ரன்னில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டி முடிந்த உடன், தோனியிடம், அடுத்த தொடரில் உங்களை பார்க்க முடியுமா? என கேட்கப்பட்டது. அதற்கு தோனி, “நம்பிக்கை உள்ளது.. ஆமாம் பார்க்கலாம்” எனக் கூறினார்dhoni

இந்தப்பதிலால் தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் அவர் வீரராக பங்கேற்பாரா அல்லது பயிற்சியாளர், ஆலோசகர் என்ற பெயரில் சென்னை அணியில் இடம்பிடிப்பாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.