அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! 

 

அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! 

தமிழகத்தின் 11 மாவட்டங்களில்  அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! 

தமிழகத்தின் 11 மாவட்டங்களில்  அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தர்மபுரி,  கடலூர், விழுப்புரம், புதுவை, நாகை, காரைக்கால், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை என்று சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.