அடியாட்களுடன் அலையும் காதலி! கண்ணீருடன் புலம்பும் காதலன் குடும்பம்!

 

அடியாட்களுடன் அலையும் காதலி!  கண்ணீருடன் புலம்பும் காதலன் குடும்பம்!

திருச்சி மேக்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேந்திரன். அதே பகுதியை சேர்ந்த ராஜா மகள் மிர்திகா.

செண்ட்ரிங் வேலை செய்து வரும் மகேந்திரனும் தனியார் கல்லூரியில் படிக்கும் மிர்திகாவும் காதலித்து வந்தது மிர்திகா வீட்டுக்கு தெரியவந்ததும் அவர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மகேந்திரனையும் அவரது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதனால் மிர்திகாவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார் மகேந்திரன். ஆனால், மிர்திகா மகேந்திரனுடன் தொடர்ந்துபேச முற்பட்டிருக்கிறார். ஆனால், மகேந்திரன் மிர்திகாவின் அழைப்பை ஏற்று அவருடன் பேசாததால் ஆத்திரம் கொண்டு தனது சித்தப்பாவிடம் அழுதிருக்கிறார்.

அடியாட்களுடன் அலையும் காதலி!  கண்ணீருடன் புலம்பும் காதலன் குடும்பம்!

இதனால் ஆவேசம் கொண்ட சித்தப்பா, அடியாட்களை அழைத்து வந்து மகேந்திரனை அடித்து துவைத்திருக்கிறார்.

படுகாயமடைந்த மகேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மகேந்திரனை தாக்கியது குறித்து அவரது குடும்பத்தினர் திருச்சி ஜீயபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பெண் வீட்டாரை விசாரிக்காமல் மகேந்திரன் குடும்பத்தினரையே மிரட்டி வந்ததாக கூறுப்படுகிறது.

அடியாட்களுடன் அலையும் காதலி!  கண்ணீருடன் புலம்பும் காதலன் குடும்பம்!

இதற்கிடையில் மிர்திகாவுக்கு உறவினர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து மகேந்திரன் குடும்பத்தினரை மிரட்டும் மிர்திகா குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மீடியாக்களிடம் குறை சொல்லி கண்ணீர் வடிக்கிறார்கள் மகேந்திரன் குடும்பத்தினர்.