அடாவடி செய்த இந்தியன் வங்கி! வங்கி முன் தற்கொலை செய்து கொண்ட விவசாயி!!

 

அடாவடி செய்த இந்தியன் வங்கி! வங்கி முன் தற்கொலை செய்து கொண்ட விவசாயி!!

கோவை வெரைடிஹால் இந்தியன் வங்கியில் கடன் பெற்ற சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த பூபதி என்பவர் வங்கியின் முன்பு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை வெரைடிஹால் இந்தியன் வங்கியில் கடன் பெற்ற சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த பூபதி என்பவர் வங்கியின் முன்பு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பூபதி மற்றும் மூன்று நண்பர்கள் சேர்ந்து பால்பண்ணை வைப்பதற்காக கோவையில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் வாங்கி உள்ளார்கள். பால்பண்ணை தொழில் லாபகரமாக இயங்காததால் கடன் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பூபதி தன் பங்கை செலுத்துவதாகவும் தன்னுடைய அடமான சொத்துக்களை திருப்பி தருமாறும் வங்கி மேலாளரிடம்  கேட்டுள்ளார். ஆனால் வங்கியின் மேலாளர் அனைவரின் கடனையும் நீங்கள் செலுத்தினால் தான் சொத்து பத்திரங்களை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் அதிகமாகி பூபதி வங்கி வாசலிலேயே மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்