அடாவடி காட்டும் ஐஸ்வர்யா: படப்பிடிப்பில் இயக்குநருடன் மோதல்!

 

அடாவடி காட்டும் ஐஸ்வர்யா: படப்பிடிப்பில் இயக்குநருடன் மோதல்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா படக்குழுவில் இயக்குநர் சொல்வதை கேட்டு நடக்காததால் படகுழிவினார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்பில் இயக்குநர் சொல்வதை கேட்டு நடக்காததால் படகுழிவினார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் ஆரி- ஐஸ்வர்யா தத்தா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் அலேகா. இப்படத்தை அய்யனார் திரைப்படத்தை இயக்கிய ராஜமித்ரன் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படம் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா படபிடிப்புக்கு இஷ்டத்துக்கு வருவதும், இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிக்காமலும், இஷ்டத்துக்கு நடிப்பதும் என செய்து வந்துள்ளார்.

aari

நேற்று மேடவாக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஐஸ்வர்யா வழக்கம்போல் தாமதமாக வந்துள்ளார். படத்தின் முக்கிய காட்சி படப்பிடிப்பின் போது இயக்குநர் சொல்வதை செய்யாததால், அவருக்கும் இயக்குநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் புதியவர் என்பதால் என்ன செய்வதென்று அறியாமல் உள்ளாராம். மேலும் நடிகை ஐஸ்வர்யாவின் இந்த செயலால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: மூளையில்லாத ஆள் பேச்சுக்கு கை தட்டலாமா! நக்கலடித்த நயன்தாரா காதலன்!