“அடப்பாவிங்களா கொடுத்த கடனை கேட்டா தீவச்சி கொளுத்தறிங்களே”கடன்கொடுத்தவருக்கு ஏற்பட்ட கதி..

 

“அடப்பாவிங்களா கொடுத்த கடனை கேட்டா தீவச்சி கொளுத்தறிங்களே”கடன்கொடுத்தவருக்கு ஏற்பட்ட கதி..

இந்த கடனை 5 மாதங்களாகியும் அவர் திருப்பி தரவில்லை. இதனால் குமாரசாமி அவரிடம் கடனை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான வெங்கேஷ் மார்ச் 5 ம் தேதி கனகபுரா பகுதிக்கு அவரை ஒரு காரில் கட்டி கடத்தி சென்றார்.

பெங்களூரு எலஹங்கா பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ற 38 வயது பட்டு வியாபாரியிடம் வெங்கடேஷ் என்பவர் 22 லட்சங்கள் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை 5 மாதங்களாகியும் அவர் திருப்பி தரவில்லை. இதனால் குமாரசாமி அவரிடம் கடனை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான வெங்கேஷ் மார்ச் 5 ம் தேதி கனகபுரா பகுதிக்கு அவரை ஒரு காரில் கட்டி கடத்தி சென்றார்.

representative image

பிறகு அங்கு குமாரசாமியின் உடைகளை அகற்றி, அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு ஓடி விட்டனர். அந்த நேரம் பார்த்து அவரின் மகள் போன் செய்ய அவரிடம் இந்த விவரங்களை குமாரசாமி கூறியதும், அவரின் உறவினர்களோடு அவர் தீயில் எரியும் இடத்திற்கு விரைந்தார் ,அங்கு குமாரசாமியை அவரது உறவினர்கள் காப்பாற்றி அருகிலுள்ள ஒரு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இந்த சம்பவம் பற்றி போலீசில் வெங்கடேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.