“அடப்பாவிங்களா! ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கொலம்பியா பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”
கொலம்பியாவின் பொகோட்டாவில் வசிக்கும் ஃபன்னி ஜோஹன்னா, என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அகமதாபாத் வந்து முதலில் மிதகாலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.
கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அகமதாபாத்தில் பஞ்சவதி பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் யாரோ 4,100 டாலரை திருடியதால், ஞாயிற்றுக்கிழமை அங்கு பரபரப்பு நிலவியது.
கொலம்பியாவின் பொகோட்டாவில் வசிக்கும் ஃபன்னி ஜோஹன்னா, என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அகமதாபாத் வந்து முதலில் மிதகாலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். ஆனால் அங்கு பிடிக்காததால் பஞ்சவதியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு போனார்
அவர் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளுக்கு இடையில் ராடிசன் ப்ளூவின் அறை எண் 205 ஐ ஆக்கிரமித்தார். அந்த கொலம்பியா பெண் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க போனதாகவும்.
பிறகு திரும்பி வந்து அவர் தனது ஹோட்டல் அறைக்குச் சென்றபோது, அவர் அறையில் வைத்திருந்த 6,000 டாலரில் , 4,100 டாலரை யாரோ திருடியிருப்பதைக் கண்டார். பின்னர் அவர் போலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து புகார் அளித்தார், “என்று எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.
நவரங்க்புரா போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
ஹோட்டல் அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கினர்.
” ரேடிசன் ப்ளூவில், விருந்தினர் பாதுகாப்புதான் எங்கள் முன்னுரிமை. எங்கள் விருந்தினர் அறைகளில் மின்னணு பாதுகாப்புகள் பொருத்தப்பட்டுள்ளன, விருந்தினர்களின் மதிப்புமிக்க பொருட்களின் பாதுகாப்பிற்காக வரவேற்பறையில் ஒரு பிரத்யேக லாக்கர் வசதியை நாங்கள் வழங்குகிறோம், ”என்று ராடிசன் ப்ளூ அகமதாபாத்தின் பொது மேலாளர் சந்தீபன் போஸ் கூறினார்.