அஜீத் ரசிகர்களுக்கு ‘நேர்கொண்ட பார்வை’படக்குழு வழங்கிய திடீர் சர்ப்ரைஸ்…

 

அஜீத் ரசிகர்களுக்கு ‘நேர்கொண்ட பார்வை’படக்குழு வழங்கிய திடீர் சர்ப்ரைஸ்…

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அஜீத் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று காலை ரிலீஸாகியுள்ளது

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அஜீத் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று காலை ரிலீஸாகியுள்ளது. ‘வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே’ என்று தொடங்கும் இப்பாடல் வலைதலங்களில் வைரலாகிவருகிறது.

வினோத் இயக்கத்தில்அஜித் நடித்திருக்கும் நேர்கொண்ட பார்வை படம்  ஆகஸ்ட் 1 அல்லது ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரகாலத்துக்கும் மேலாக யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசைக்கோர்ப்பில் ஈடுபட்டுள்ளார். அது குறித்துப்பேசிய யுவன் தான் இதுவரை பணியாற்றிய தல படங்களில் இப்படம்தான் அதிக சவாலைக் கொடுத்துவருவதாகவும், மொத்தப் படத்துக்கும் பின்னணி இசை முடிய மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

படத்தின் ட்ரெய்லர் மற்ற புரமோஷனல் பணிகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு சர்பரைஸாக இன்று வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில், உமாதேவி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளார். இந்தப் பாடல் மூலம் நடிகர் அஜித்குமார் படத்துக்காக முதன் முதலான பாடல் வரிகளை உமாதேவி எழுதியுள்ளார்.