அஜித் பட நடிகர் இறப்பதற்கு முன் கடைசியாக எழுதிய நாடகம்…  நாடகத் திருவிழாவில் அரங்கேற்றம்!

 

அஜித் பட நடிகர் இறப்பதற்கு முன் கடைசியாக எழுதிய நாடகம்…  நாடகத் திருவிழாவில் அரங்கேற்றம்!

இந்திய திரையுலகில் பல மொழிகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர், கிரிஷ் கர்னாட். இவர் தமிழில் காதலன், ரட்சகன், ஹே ராம், முகமூடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். 

இந்திய திரையுலகில் பல மொழிகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர், கிரிஷ் கர்னாட். இவர் தமிழில் காதலன், ரட்சகன், ஹே ராம், முகமூடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். 

கிரிஷ் கர்னாட் தான் இறப்பதற்கு முன்னர் கடைசியாக ‘கிராசிங் டு தாலிகோட்டா’ என்ற நாடகத்தை எழுதினார் என சாரங் நாடக விழாவின் இயக்குனர் அசோக் குல்கர்னி கூறியுள்ளார்.

crossing-to-talikota

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி சாகித்ய ரங்கபூமி பிரதிஷ்டான் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சாரங் நாடக விழாவில் கிரிஷ் கர்நாட் எழுதிய கடைசி நாடகமான கிராசிங் டு தாலிகோட்டாவை திரையிடப்படும் என்று அறிவித்துள்ளனர். பரிமல் மற்றும் பிரமோத் சவுத்ரி ஆகியோரால் நடத்தப்படும் இந்த ஐந்து நாள் நாடக விழா கோத்ரூட்டின் யஷ்வந்த்ராவ் சவான் நாட்டியக்ருஹாவில் நடைபெற இருக்கிறது

“இந்த நாடகம் 1565 ஆம் ஆண்டில் இந்தியாவை ஆண்ட விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைப் பற்றியது, டெக்கான் சுல்தான்களின் கூட்டணி எப்படி விஜயநகரத்தை தோற்கடித்தது?, தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக திகழ்ந்த ஒரு பேரரசசு முற்றிலுமாக அழிக்கப்பட்டது எப்படி? என்ற காட்சிகளை தாங்கிய நாடகமாக இருக்கும். கிரிஷ் கர்னாட் அவரது நினைவாக, இந்த நாடக விழா அவரது வரலாற்று நாடகத்துடன் திரையிடப்படும். ”

saarang

அனைவருக்கும் அனுமதி  மற்றும் வணிக ரீதியான நாடகங்கள் இடம் பெறாது என்பது இந்த நாடக விழாவின் சிறப்பு அம்சங்களாகும். மேலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு மொழிகளில் உள்ள நாடகங்கள் அரேங்கேற்றப்படும் என்று விழாவின் இயக்குனர் தெரிவித்தார்.