‘அஜித்’ பட நடிகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

 

‘அஜித்’  பட நடிகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

இதையடுத்து அரசியல் பக்கம் சென்ற இவர், பாஜகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார். 

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அரசியல் பக்கம் சென்ற இவர், பாஜகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார். 

suresh

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பல லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்களை வாங்கியுள்ளார். அதை கேரளாவில் பதிவு செய்தால் லட்சக்கணக்கில் வரி கட்டவேண்டும் என்று எண்ணி போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவுசெய்தார்.  இதன் மூலம் ரூ.25 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

car

இந்நிலையில் கேரள மாநில கூடுதல் காவல்துறை இயக்குநர் டோமின்.ஜே.தக்கன்சேரி இந்த வழக்கில்  திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

முன்னதாக  போலி ஆவணங்கள் கொடுத்து சொகுசு கார் பதிவு செய்த வழக்கில் அமலா பால், நடிகர் பகத் பாசில் ஆகியோர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.