‘அஜித்’ படத்தையடுத்து இந்த நடிகர் படத்திற்குத் தான் எதிர்பார்ப்பு அதிகமாம்! யார் அந்த நடிகர் தெரியுமா?
அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்குப் பிறகு இவருடைய படத்திற்குத் தான் எதிர்பார்ப்பு அதிக எதிர்பார்ப்பு உள்ளது என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்குப் பிறகு இவருடைய படத்திற்குத் தான் எதிர்பார்ப்பு அதிக எதிர்பார்ப்பு உள்ளது என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த பொங்கல் தினத்தன்று பெரிய தலைகளின் படங்கள் போட்டிப் போட்டன.அதில் ஒன்று சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம். மற்றொன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம்.
படம் வெளியான முதல் வாரத்தில் இரண்டு படங்களுமே சமமாகத் தான் வசூல் வேட்டை நடத்தின. ஆனால் அது முதல் வாரம் மட்டுமே! இரண்டாம் வாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பேமிலி ஆடியன்ஸ் முழுவதும் ‘விஸ்வாசம்’ படத்திற்குப் படை எடுத்துச் சென்றனர்.
அதன் பின்னர் பாக்ஸ் ஆபீசை தும்சம் செய்தது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் என்ற பெருமையுடன்,தமிழகத்தில் ‘பாகுபலி-2’ படத்திற்குப் பிறகு அதிக வசூலைச் செய்த படம் என்ற பட்டத்தையும் தட்டி சென்றது .
இந்நிலையில்,இந்த ஆண்டில் அதிவேகத்தில் முன்பதிவான படம் என்று விஸ்வாசம் படத்தைத் திரை அரங்க உரிமையாளர்கள் கூறிவந்த நிலையில், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘சூர்யா’நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ படத்திற்குத் தான் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு மற்றும் முன்பதிவு மும்முரமும் இருந்து வருவதாகக் கூறுகின்றனர்.
Almost 5 long months after Viswasam pre-booking for a Tamil movie is going to be really active. Show schedules and Booking update expected in the weeks to come. #NGK#NGKFromMay31@selvaraghavan @Suriya_offl @Sai_Pallavi92 @Rakulpreet ? pic.twitter.com/aXovwdOTNh
— Southern Star Intl (@SouthernStarInt) May 13, 2019
மேலும் இப்படத்தின் முன்பதிவு தமிழகம் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளி நாடுகளிலும் பரபரப்பாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்தியிருக்கும் இப்படம் வருகிற மே 31ம் தேதி வெளியாகும் எனப் படக் குழு அறிவித்திருக்கிறது.