அஜித் ஜீரோ டெடிக்கேஷன், சூர்யாவோட காலம் முடிஞ்சு போச்சு: அஜித் சூர்யாவை விளாசிய பிரபல நடிகர்!

 

அஜித் ஜீரோ டெடிக்கேஷன், சூர்யாவோட காலம் முடிஞ்சு போச்சு: அஜித் சூர்யாவை விளாசிய பிரபல நடிகர்!

நடிகர்கள்  அஜித் , சூர்யா மற்றும் ராதிகா குறித்து நடிகர் பிரித்விராஜ்  கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர்கள்  அஜித் , சூர்யா மற்றும் ராதிகா குறித்து நடிகர் பிரித்விராஜ்  கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

babloo

நடிகர் ‘பப்லு’ பிரித்விராஜ் வெள்ளித்திரை மட்டுமில்லாது மர்மதேசம், அரசி, வாணி ராணி உள்ளிட்ட சீரியவல்களிலும் நடித்து  தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.  இவர் சமீபத்தில்  இவர் இணையதள ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், நடிகர்கள் அஜித், சூர்யா, ராதிகா ஆகியோர் குறித்துப் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ajith

இந்நிலையில் அஜித் குறித்துப் பேசியுள்ள  ‘பப்லு’ பிரித்விராஜ்,  அஜித் இறங்கி வேலை பார்ப்பவர், அழகானவர். ஆனால் ஜீரோ டெடிக்கேஷன் உடையவர். அவருக்கு நடிப்பதில் ஆர்வம் கிடையாது. ஆனால் அவர் அதிர்ஷ்டசாலி என்பதால் அவருக்குப் புகழ் வீடு தேடி செல்கிறது. அவருக்குப் பிரியாணி சமைப்பதில் தான் ஆர்வம் அதிகம். நடிப்பதில் கிடையாது’ என்று கூறியுள்ளார். 

suriya

 
அதே போல் சூர்யா பற்றி கூறிய அவர், சூர்யா  டெடிகேட்டிவான  ஆளு. ஆனால்  நடக்கும் அனைத்து  விஷயங்களும்  தன்னை பற்றியும், தன்னை  சுற்றியும் தான் நடக்கவேண்டும் என்று நினைப்பவர். பயங்கரமான நபர். அவர் காலம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறிய பப்லு’ பிரித்விராஜ் உச்சக்கட்டமாக ராதிகா குறித்துப் பேசுகையில், அவருடன் நடிப்பது மிகவும் கொடூரமானது என்று தெரிவித்துள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. 

radhika

முன்னதாக அஜித்துடன் பப்லு பிரித்விராஜ் அவள் வருவாளா படத்தில் நடித்திருந்ததும், ராதிகாவுடன் இணைந்து வாணி ராணி சீரியலில் பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது.