அஜித் என் குழந்தை மாதிரி, ஆனாலும் அந்த ஆசை மட்டும் நிறைவேறவில்லை: சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்!

 

அஜித் என் குழந்தை மாதிரி, ஆனாலும் அந்த ஆசை மட்டும் நிறைவேறவில்லை: சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்!

நான் சொல்வதை அஜித் கேட்பார், அதனால் அவர்  எனக்கு ஒரு குழந்தை மாதிரி என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நான் சொல்வதை அஜித் கேட்பார், அதனால் அவர்  எனக்கு ஒரு குழந்தை மாதிரி என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர்களின் அம்மா வேடம் என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜீவா, உதயநிதி ஸ்டாலின்,விமல்,பரத்  எனப் பல நடிகர்களுக்கு  அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ள சரண்யா பொன்வண்ணன் தன் ஆசையைத் தெரிவித்துள்ளார். அதில், ‘அஜித் யார் எது கூறினாலும் அதனை, மிகவும் அமைதியாக அமர்ந்து கேட்பார். அதே போல் ஒரு விஷயத்தில் எங்கள் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது. நாங்கள் இருவருமே பிரியாணி செய்தால் நல்ல டேஸ்ட் வரும். அவர் ஒருமுறை அவருடைய கையாலேயே பிரியாணி செய்து எனக்குப் பரிமாறினார். அதே போல் அவருக்கு ஒரு நாள் நானும் பரிமாற வேண்டும் என்கிற ஆசை உள்ளது அது இப்போது வரை நிறைவேறவில்லை. எப்போதும் நான் சொல்லுவதை ஒரு குழந்தை கேட்பது போல் கேட்பார் அதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவரும் எனக்கு ஒரு குழந்தை’ என்று கூறியுள்ளார்.