அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நான் தான்: பிரபல பாடகர் ஓபன் டாக்!

 

அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நான் தான்: பிரபல பாடகர் ஓபன் டாக்!

அஜித்தை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை: அஜித்தை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தை கடைசியாக இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் வினோத் இயக்கி வரும் அஜித்தின் 59வது படத்திற்கு “நேர்கொண்ட பார்வை” என தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படம் பாலிவுட்டில் ஹிட் அடித்த  “பிங்க்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித் நடித்து வருகிறார். டாப்ஸி கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.

spb ttn

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  ‘அஜித் முதன் முதலில் ஹீரோவாக நடித்தது தெலுங்கு படத்தில் தான். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்தியது நான் தான். எனக்கு அவரிடம் பிடித்தது பேட்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, சமூக வலைதளங்களில் கருத்துச் சொல்வது என எதுவும் இருக்காது. நேற்று வரை கார், ரேசிங் என இருந்தார், இப்போது அதுவும் இல்லை. சினிமா, குடும்பம் அவ்வளவுதான்’ என்று பேசியுள்ளார்.

 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியுள்ள இந்த வீடியோவை அஜித்தை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.