அஜித்தின் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..!?

 

அஜித்தின் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..!?

போனிகபூர் தயாரிப்பில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருக்கிறார் அஜித். எச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம்  இம்மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அஜித்தின் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..!?

போனிகபூர் தயாரிப்பில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருக்கிறார் அஜித். எச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம்  இம்மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், சென்னை உயர்நீதி மன்றத்தில், தனது தயாரிப்பில் உருவான  ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியாவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.