‘அஜாக்கிரதை அலட்சியம், இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள்’ : நடிகர் விவேக் ஆவேசம்!

 

‘அஜாக்கிரதை அலட்சியம், இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள்’ : நடிகர் விவேக் ஆவேசம்!

பள்ளத்துக்குள் மண்  சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

திருச்சி : மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து  நடிகர் விவேக் சாடியுள்ளார். 

surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்  சுர்ஜித் என்ற  2 வயது குழந்தை நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில்  தவறி விழுந்துள்ளது.  குழந்தையை மீட்கும் பணியில் கடந்த 15 மணிநேரமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். குழந்தை சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளத்துக்குள் மண்  சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் #prayforsurjit, SaveSurjith போன்ற ஹேஷ்டாக்குகளும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.  இதுகுறித்து நடிகை விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு’ என்று பதிவிட்டுள்ளார்.