அச்சு வெல்லங்களில் கலப்படம்: ஆலைகளுக்கு அதிரடி சீல்!

 

அச்சு வெல்லங்களில் கலப்படம்: ஆலைகளுக்கு அதிரடி சீல்!

அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 

நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் அருகேயுள்ள பிலிக்கல்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 400ற்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 

sugar

இந்நிலையில் ஆலைகளில் தயாரிக்கப்படும் வெல்லத்தில், கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காக வெள்ளை சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கலப்பதாகப் புகார் வந்தது.

ttn

இதையடுத்து நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில்  2 ஆயிரத்து 400 கிலோ கலப்பட வெல்லம் மற்றும் 62 கிலோ சர்க்கரையைப் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து அதிகாரிகள் ஆலைகளுக்குச் சீல் வைத்தனர்.